A
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 சம்பவங்கள் எண்ணிக்கை இன்று 7,702 ஆக உயர்வு

ஷா ஆலம், ஜூன் 2- நாட்டில் இன்று கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றை விட 600 அதிகரித்து 7,703 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 7,105 ஆக இருந்தது.

சிலாங்கூரில் 2,728 சம்பவங்கள் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 701 சம்பவங்களும் சரவாவில் 588 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 586 சம்பவங்களும் ஜொகூரில் 554 சம்பவங்களும் பதிவாகின.

பிற மாநிலங்களில் பதிவான நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

கிளந்தான் (541), பினாங்கு (407), கெடா (293), பகாங் (237), திரங்கானு (224), பேராக் (224), மலாக்கா (209), லபுவான் (159), பெர்லிஸ் (7), புத்ரா ஜெயா (1)


Pengarang :