HEALTHMEDIA STATEMENTNATIONAL

 இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் 5,812 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 25– நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,812 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,841 ஆக  இருந்தது.

சிலாங்கூரில் 2,187 பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் கோவிட்-19 நோய் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 722,659 ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூருக்கு அடுத்து கோலாலம்பூரில் 771 பேரும், ஜொகூரில் 196 பேரும், சபாவில் 156 பேரும் சரவாவில் 673 பேரும் நெகிரி செம்பிலானில் 658 பேரும் கிளந்தானில் 98 பேரும் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு (270), பேராக் (72), கெடா (186), மலாக்கா (223), பகாங் (139), திரங்கானு (46), லபுவான் (123), புத்ரா ஜெயா (14) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன. பெர்சிலிசில் இன்று நோய்த் தொற்று பதிவு செய்யப்படவில்லை.


Pengarang :