HEALTHMEDIA STATEMENTNATIONAL

நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,437 ஆக பதிவு- ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் உயர்வு

ஷா ஆலம், ஜூன் 29– கடந்த ஒரு  வார காலமாக குறைவான எண்ணிக்கையை பதிவு செய்து வந்த தினசரி கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,437 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகக்கடைசியாக கடந்த 18 ஆம் தேதி இந்த எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டி பதிவானது. அன்றைய தினம் 6,440 பேருக்கு நோய்த் தொற்று கண்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் 2,299 நேர்வுகள் பதிவான வேளையில் கோலாலம்பூர் நான்கு இலக்கங்களைத் தொட்டு 1,361 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. நெகிரி செம்பிலானில் 700 சம்பவங்களும் கெடாவில் 284 சம்பவங்களும் ஜொகூரில் 271 சம்பவங்களும் மலாக்காவில் 252 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

 இதனை அடுத்து பகாங் (250), சரவா (242), சபா (178), பேராக் (184), கிளந்தான் (131), லபுவான் (117), பினாங்கு (115), புத்ரா ஜெயா (32), திரங்கானு (21) ஆகிய மாநிலங்கள் உள்ளன. பெர்லிசில் எந்த சம்பவமும் பதிவாகவில்லை.


Pengarang :