HEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் நேற்று 92,400 பேர் கோவிட் -19 தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், ஜூலை 10- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 92,400 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்.

அதிகமானோர் தடுப்பூசி பெற்ற மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடம் வகிப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

நாடு முழுவதும் நேற்று 337,478 பேர் தடுப்புசி பெற்றதாக கூறிய அவர், இதன் வழி நாட்டில் இதுவரை தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை  ஒரு கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்து 748 பேராக உயர்ந்துள்ளதாகச் சொன்னார்.

நேற்றைய நிலவரப்படி 213,396 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 124,082 பேருக்கு இரண்டாது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூருக்கு அடுத்து சரவாவில் 65,967 பேரும் கோலாலம்பூரில் 52,891 பேரும் பேராக்கில் 25,877 பேரும் நெகிரி செம்பிலானில் 21,057 பேரும் தடுப்பூசியை நேற்று பெற்றனர் என்றார் அவர்.


Pengarang :