ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

லைசென்ஸ், சாலை வரியை இனி தபால் நிலையங்களில் புதுப்பிக்கலாம்

கோலாலம்பூர், ஆக 8- நாளை திங்கள் கிழமை தொடங்கி வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் சாலை வரியை தபால் நிலையங்களில் புதுப்பிக்கலாம். எனினும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இந்த சேவையைப் பெற விரும்புவோர் வருகைக்கான முன்பதிவை செய்வது அவசியமாகும்.

வருகைக்கான முன்பதிவை பொது மக்கள் இன்று தொடங்கி http://www.pos.com.my  எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது போஸ் மலேசியா செயலி வாயிலாக மேற்கொள்ளலாம் என்று போஸ் மலேசியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வருகைக்கான முன்பதிவை செய்ய முடியும் என்பதோடு ஒவ்வொரு வருகையின் போதும் மூன்று பணிகளை மட்டுமே மேற்கொள்ள இயலும் என்று அது தெரிவித்த து.

தபால் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, மைசெஜாத்ரா செயலியில் தகவல்கள் உள்ளிடுவது,  போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு உடல் நலமின்றி இருக்கும் பட்சத்தில் அஞ்சலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.

 


Pengarang :