கோலாலம்பூர், ஆக 16- நாட்டில் நேற்று வரை மொத்த மக்கள் தொகையில் 32.9 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 415 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 76 ஆயிரத்து 440 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 78 லட்சத்து 10 ஆயிரத்து 855 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
விகிதாசார அடிப்படையில் 72.9 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 45.9 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.