ஷா ஆலம், ஆக 24: சிலாங்கூர் கோவிட் -19 தடுப்பு பணிக்குழுவை (எஸ்.டி.எஃப்.சி) நிறுவியது மாநிலத்தில் தொற்றுநோயை சமாளிக்க மத்திய அரசு மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் (JKNS) தேவைகளை நிறைவு செய்ய உதவியதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
பாதுகாப்பான நுழைவு படியாக ”சிலாங்கா செயலி ” விண்ணப்பம், பல துறைகளுக்கு குடிமக்கள் குறியீடுகள் மூலம் எச்சரிக்கை நிலை அமைப்பு மற்றும் 56 மாநில சட்டமன்ற தொகுதிகளில் பதிவு பரிசோதனை போன்ற பணிகளில் உதவ STFC உருவாக்கப்பட்டது. அதன் உதவியுடன் கோவிட் -19 நோய்தொற்றுகளை கையாள கண்டறிய முடிந்தது என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.
தொழில்துறை மற்றும் பணியிடங்களில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த எஸ்.டி.எஃப்.சி., ஹாட்ஸ்பாட் பகுதிகளில் (POIS) தொற்று தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் சிலாங்கூர் சமூக சுகாதார தொண்டர்களை (சுகா) ஒரு சுகாதார ஆதரவு குழுவாக நிறுவியது மட்டுமின்றி “எஸ்டிஎஃப்சி மூலமும், மாநில அரசாங்கம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்தை (செல்வேக்ஸ்) வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது, குறிப்பாக பொருளாதாரத் துறையில் முக்கிய நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி வழங்க ‘’செல்வேக்ஸ்” மூலம் சீரிய பங்களிப்பை செய்ததாக அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் சபக் சட்டமன்ற உறுப்பினர் அஹ்மத் முஸ்டைன் ஓத்மானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். கோவிட் -19 தொற்றுகளின் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, சிலாங்கூர் அரசு கடந்த மார்ச் 12 அன்று STFC ஐ ஒரு ஆலோசனை குழுவாக அமைத்தது.
இதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மத் தலைமை தாங்குகிறார் மற்றும் அதன் உறுப்பினர்கள் முன்னாள் ஜே.கே.என்.எஸ் இயக்குனர் டத்தோ டாக்டர் காலித் இப்ராகிம் மற்றும் தேசிய தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அடீபா கமருல்சாமன் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்டுள்ளனர்.