HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டார்- அமைச்சர்களின் பதவி உறுதிமொழிச் சடங்கில் பங்கேற்கவில்லை

கோலாலம்பூர், ஆக 30- கோவிட்-19 நோயாளியுடன் நெருங்கிய  தொடர்பில் இருந்த காரணத்தினால் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனிமைப்படுத்தப்பட்டார். இதன் காரணமாக அவர் இன்று நடைபெற்ற அமைச்சர்களின் பதவி உறுதி மொழிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் நாளை நடைபெறும் 64வது தேசிய தின விழாவில்  அவர் இயங்கலை வாயிலாக மட்டும் பங்கேற்பார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

புதிய அமைச்சர்களின் இரகசிய காப்பு மற்றும் பதவி பிரமாணச் சடங்கு இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய பேரரசர் முன்னிலையில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நடைபெறுகிறது.

நாளை புத்ரா ஜெயா, வீர ர்கள் சதுக்கத்தில் நடைபெறும் 2021ஆம் ஆண்டிற்கான தேசிய தின விழாவில் பிரதமர் இயங்கலை வாயிலாக பங்கேற்பார்.

பிரதமர் எப்போது தொடங்கி மற்றும் எத்தனை நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்?, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கோவிட்-19 நோயாளி யார்? என்ற விபரங்களை அந்த அறிக்கை வெளியிடவில்லை. 


Pengarang :