HEALTHMEDIA STATEMENTSELANGOR

நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை பத்துதீகா மற்றும் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற தொகுதிகளில்

ஷா ஆலம், 12 செப்டம்பர்: சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) நாளை பத்துதீகா மற்றும் தஞ்சோங் சிப்பாட் மாநில சட்டமன்ற தொகுதிகளில் தொடரும்.

இந்த மாநிலத்தின் எந்த குடிமகனும், தடுப்பூசியைப் பெறுவதில் இருந்து விலக்கப் 
படமலிருப்பதை உறுதிசெய்யும் திட்டம் நாளை மறுநாள்  உலு பெர்ணம் DUN இல் நடைபெறும்.

டாக்டர் சித்தி மரியா மாமுட், பொதுச் சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூறுகையில், வாராந்திர திட்டமான இது, இன்று தொடங்கி செப்டம்பர் 18 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 11 மாநில சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இந்த நிகழ்ச்சி மேரு மாநில சட்டமன்ற தொகுதி தொடங்கி பத்துதீகா, தஞ்சோங் சிப்பாட், உலு பெர்ணம், கோம்பாக சித்தியா, புக்கிட் அந்தாரபங்சா, பத்தாங் காளி, பந்திங், தெராத்தாய், டெங்கில் மற்றும் கம்பங் துங்கு ஆகியவற்றை உள்ளடக்கியது.

"தடுப்பூசி பெறாதவர்களுக்கு, கோவிட் -19 தடுப்பூசியை இலவசமாகப் பெற அருகிலுள்ள இடத்திற்கு நேரடியாக வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்," என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.

Pengarang :