ஷா ஆலம், செப் 29- நாட்டில் இன்று 12,434 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை 11,332 ஆக இருந்தது. சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று 131 சம்பவங்கள் அதிகரித்து 1,362 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். சரவா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,967 சம்பவங்கள் பதிவு செய்துள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,289), கிளந்தான் (1,125), சபா (1,000) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- பேராக்– 971 பினாங்கு– 863 பகாங் – 663 கெடா – 652 திரங்கானு – 612 மலாக்கா– 375 கோலாலம்பூர் – 284 நெகிரி செம்பிலான் – 169 பெர்லிஸ் – 79 புத்ரா ஜெயா – 18
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1084273_PTJ08_03102020_KKM_BN202010021249-960x675.jpg)