MEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 5- சிலாங்கூரிலுள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோல லங்காட், சிப்பாங் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்களாகும்.

சிலாங்கூர் தவிர்த்து, பெர்லிஸ், கெடா, பினாங்கு, கிளந்தான், பேராக், ஜொகூர் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களிலும் இந்நிலை நீடிக்கும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட விளக்கப் படத்தில் அது குறிப்பிட்டது.

பேராக்கில் கிரியான், லாருட், மாத்தாங், செலாமா, உலு பேராக், கோல கங்சார், மஞ்சோங், பேராக் தெங்கா, பாகான் டத்தோ ஹிலிர் பேராக் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

 

 


Pengarang :