HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 6,210 பேர் பாதிப்பு

ஷா ஆலம், அக் 21- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் 6,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 5,516 ஆக இருந்தது.

இன்றைய இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 13 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதனிடையே, நாடு முழுவதும் 145,258 பேருக்கு நேற்று கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவர்களில் 4.28  பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :