MEDIA STATEMENTNATIONAL

மலாக்கா தேர்தல்- பக்கத்தான் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது

ஷா  ஆலம், அக் 29- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் உடன்பாடு கண்டுள்ளன.

இந்த தேர்தலில் ஹராப்பான் சின்னத்தை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பக்கத்தான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பக்கத்தான் தலைவர் மன்றக் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஜசெக 8 தொகுதிகளிலும் அமானா கட்சி 9 தொகுதிகளிலும் கெஅடிலான் கட்சி 11 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அவர் சொன்னார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தேர்தலில் களம் காணும் அனைத்துக் கட்சிகளும் ஹராப்பான் சின்னத்தைப் பயன்படுத்தும் என்று இன்று பி.கே.ஆர். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அமானா கட்சித் தலைவர் முகமது சாபு மற்றும்  ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Pengarang :