Rusia mengumumkan mendaftarkan vaksin Covid-19 pertama di dunia, dikenali Sputnik V. Foto: REUTERS
HEALTHMEDIA STATEMENTNATIONAL

96.9 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 1- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி வரை 2 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 471 பெரியவர்கள் அல்லது 96.9 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 30 லட்சத்து 28 ஆயிரத்து 508 பேர் அல்லது 98.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு  டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 89.7 விழுக்காட்டு இளையோர் அல்லது 28 லட்சத்து 22 ஆயிரத்து 370 பேர்  குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 86.1 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 9 ஆயிரத்து 263 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 135,914 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி பெற்றவர்களில் 8,313 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,703 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 122,898 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 35 லட்சத்து 17 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர, 24 லட்சத்து 57 ஆயிரத்து 510 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :