கோலாலம்பூர், டிச 17- விரிவான மருத்துவ பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்புக்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இங்குள்ள தேசிய இருதய சிகிச்சை கழகத்தில் (ஐ.ஜே.என்.) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 7.00 மணிக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஐ.ஜே.என். அறிக்கை ஒன்றில் கூறியது.
துன் மகாதீர் இன்னும் சில தினங்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, துன் மகாதீரின் அதிகாரி ஒருவர் ஐ.ஜே.என். வெளியிட்ட அறிக்கையை உறுதிப்படுத்தினார்.