ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் உதவி

ஷா ஆலம், டிச 2-  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

இன பேதங்களைக் கடந்து மலேசியர்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் மனப்போக்கை  இது பிரதிபலிப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்நோக்கிய போதிலும் அரசு ஊழியர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதை காண முடிகிறது.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற வேட்கை அவர்களுக்கு உள்ளதை உணர முடிகிறது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் அவர்களைக் காப்பாற்றுவதிலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

சிலாங்கூர் அரசின் ஆதரவிலான செர்வ் மற்றும் டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்புகள் வாயிலாக 2,500 பேர் வெள்ளத்திற்கு பிந்தைய சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :