ஊழல் வழக்கு- எதிர்வாதம் புரிய ஜாஹிட் ஹமிடிக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் ஜன 24 ;- யாசாசான் அக்கால்புடி அறவாரியத்தின் நிதி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி, ஊழல், சட்டவிரோத பணமாற்றம் உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்காப்பு வாதம் புரியும்படி டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடிக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம இன்று உத்தரவிட்டது.

ஜாஹிட் ஹமிடிக்கு சொந்தமான அந்த அறவாரியத்திற்கு சொந்தமான பல லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 12 ஊழல் குற்றச்சாட்டுகள், 8 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் 27 சட்டவிரோத பணமாற்று குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்ததைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் சேகுவரா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த 2015 முதல் 2018 வரை துணைப் பிரதமராக இருந்த போது 69 வயதான ஜாஹிட் இந்த குற்றங்களைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

தற்காப்பு வாதத்தின் போது ஜாஹிட் சத்தியபிரமாண வாக்குமூலத்தின் அடிப்டையில் சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சாட்சியமளிப்பார். இதன் மூலம் எதிவாதம் செய்யும் போது குற்றஞ்சாட்டப்பட்டவரை குறுக்கு விசாரணை செய்ய அரசுத் தரப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்.


Pengarang :