ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிக்கிட்ஸ் மலேசியாவில் கிட்டத்தட்ட 98,000 சிறார்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி போடபட்டது

கோலாலம்பூர்,பிப் 12: நாட்டில் நேற்றுவரை கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 97,975 பேர் அல்லது 2.7 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிக்கிட்ஸ் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது, சிறார்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையே எட்டு வார இடைவெளியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதை விரைவுபடுத்தும் முயற்சியில், இந்த திங்கட்கிழமைக்குள் மொத்தம் 1,055 பள்ளிகள் தடுப்பூசி மையங்களாக (பிபிவி) அடையாளம் காணப்பட்டு செயல்படத் தொடங்கும்.

சுகாதார அமைச்சகம் (MOH) இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் 70 சதவீத தகுதியுள்ள சிறார்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கும், பிக்கிட்ஸ் செயல்படுத்துவதன் மூலம் ஆறு மாதங்களுக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக வழங்கவும் இலக்கு வைத்துள்ளது. இதற்கிடையில், கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 1 கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 547 பேர் அல்லது 55.8 விழுக்காட்டினர் நாட்டில் கோவிட்-19 இன் பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 622 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்து 391 பேர் அல்லது 99.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 முதல் 17 வயதுடைய இளயோரில் 27 லட்சத்து 95 ஆயிரத்து 30 பேர் அல்லது 88.8 விழுக்காட்டினர் இடண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், மேலும் 28 லட்சத்து 73 ஆயிரத்து 15 பேர் அல்லது 91.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

நேற்று, 20,703 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 160,193  பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 1,578 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் மற்றும் 137,912 பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியையும் பெற்றனர், பிக்-ன் கீழ் கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 270 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக மொத்தம் 24 இறப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

-பெர்னாமா


Pengarang :