HEALTHMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசாருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- மார்ச் 8 இல் பணிக்குத் திரும்புவார்

ஷா ஆலம், மார்ச் 2- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி. -பி.சி.ஆர். சோதனையில் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது .

சுகாதார அமைச்சின் விதிமுறைப்படி அவர் ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று பத்திரிகை செயலகம் கூறியது. வரும் மார்ச் 8 ஆம் தேதி அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவார்.

இந்நோய் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு அமிருடின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மந்திரி புசார், அவரின் குடும்பத்தினர் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.


Pengarang :