ECONOMYSELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 121 ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதளிப்பு

ஷா ஆலம், மார்ச் 21– ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) தனது பணியாளர்கள் 121 பேருக்கு 2021 ஆம் ஆண்டின் சிறந்த சேவைக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த பணியாளர்களுக்கு 1,000 வெள்ளி ரொக்கம், 400 வெள்ளிக்கான எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு கணக்கு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது தவிர, மேலும் 24 ஊழியர்களுக்கு சிறப்பு சேவைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர்கள் 400 வெள்ள ரொக்கத் தொகையையும் நற்சான்றிதழையும் பெற்றனர்.

இந்த நிகழ்வில் துறைகளுக்கான சிறந்த சேவை விருதை திடக்கழிவு மேலாண்மைத் துறை மற்றும் பொது தூய்மைத் துறை ஆகியவை பெற்றன. இத்துறைகளுக்கு 5,000 வெள்ளி ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த  பணியாளர் விருதளிப்பு நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார். மாநில அரசின் செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் மற்றும் ஷா ஆலம் டத்தோ பண்டார் ஜமானி அகமது மன்சோர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


Pengarang :