ஷா ஆலம், ஏப் 8– அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு மாநில அரசு ஒரு மாத சம்பளத்தை சிறப்பு உதவித் தொகையாக வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த சிறப்பு உதவித் தொகை திட்டத்திற்காக 3 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி வழங்கப்படும் என்றார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.