ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 14 லட்சம் சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், ஏப் 17- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 39.5 விழுக்காட்டினர் அல்லது 14 லட்சத்து 3 ஆயிரத்து 498 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில் 10.3 விழுக்காட்டினர் அல்லது 366,295 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப்  பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 92.3 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 71 ஆயிரத்து 425 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 95.6 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 73 ஆயிரத்து 462 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அது குறிப்பிட்டது.

மேலும், நேற்று வரை நாட்டிலுள்ள பெரியவர்களில் 67.9 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 302 பேர் பூஸ்டர் எனப்படும்  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்..

இது தவிர, 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரத்து 578 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 32 லட்சத்து 37 ஆயிரத்து 257 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 79,398 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 15,124  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 59,818 இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,456 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 045 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 12 மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :