ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 6,968  பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், ஏப் 21– நாட்டில் நேற்று  மொத்தம் 6,968 கோவிட்-29 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்நோயிலிருந்து நேற்று 8,267 பேர் குணமடைந்துள்ளதாகக் கூறிய அவர், இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 42 லட்சத்து 83 ஆயிரத்து 013 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நேற்று 16 பேர் மரணமடைந்தனர். அவர்களில் எண்மர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்தனர். இதன் வழி இந்நோய்க்கு பலியானோரின் மொத்த  எண்ணிக்கை 35,465 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது, 88,489 நோயாளிகள் வீட்டிலும், 183 நோயாளிகள் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்திலும் (பி.கே.ஆர்.சி.) மற்றும் 1,955 நோயாளிகள் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம் 97 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில்  34 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படவில்லை.  எஞ்சிய  63 பேருக்கு  செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது   என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி  அனைத்து  மாநிலத்திலும்  ஐ.சி.யு அல்லது ஐ.சி.யு.அல்லாத படுக்கைகளின் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது.

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 243 கோவிட் -19 நோயாளிகளில்  119 பேர் அல்லது 49 விழுக்காட்டினர் 3, 4 மற்றும் 5 ஆம் கட்டப் பாதிப்பையும் 124 பேர் அல்லது 51 விழுக்காட்டினர் 1 மற்றும் 2 ஆம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர்  என்று அவர் கூறினார்.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு : 2,854 சம்பவங்கள் (40.96 சதவீதம்)
2 ஆம் பிரிவு : 4,083 சம்பவங்கள் (58.60 சதவீதம்)
3 ஆம் பிரிவு : 11 சம்பவங்கள் (0.16 சதவீதம்)
4 ஆம் பிரிவு : 8 சம்பவங்கள் (0.11 சதவீதம்)
5 ஆம் பிரிவு : 172  சம்பவங்கள் (0.17

நேற்று மொத்தம் நான்கு புதிய நோய்த் தொற்று மையங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 106 ஆக உள்ளது.

 


Pengarang :