ECONOMYSELANGOR

வார இறுதியில் நான்கு இடங்களில் மக்கள் பரிவு விற்பனை இயக்கம்

ஷா ஆலம், ஏப் 22- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் இவ்வார இறுதியில் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.

பி.எல்.பி. கடைத் தொகுதி, பாரிட் 1, சுங்கை சீரே, தஞ்சோங் காராங் எனும் முகவரியிலும் பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதி சேவை மைய வளாகத்திலும் வரும் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை சந்தை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

வரும் ஞாயிறன்று அதே நேரத்தில் கோல சிலாங்கூர், கம்போங் தஞ்சோங் சியாம், கெடாய் அங்கிரி மாஜூவிலும் கிள்ளான், கோத்தா ராஜா பள்ளிவாசல் அருகிலும் இந்த விற்பனை நடைபெறும்.

இந்த விற்பனையில் கலந்து மலிவான விலையில் பொருள்களை வாங்கிச் செல்லுமாறு பொது மக்களை பி.கே.பி.எஸ். தனது பேஸ்புக் வாயிலாக கேட்டுக் கொண்டது.

பொருள் விலையேற்றம் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை மாநிலத்தின் 64 இடங்களில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.


Pengarang :