கோலாலம்பூர், மே 15– இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் பௌத்த சமயத்தினருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் ராஜா பெர்மைசூரி துங்கு ஹாஜா அமினா மைமுனா தம்பதியர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
பௌத்த சமயத்தினர் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நீடிக்க தாங்கள் பிரார்த்திப்பதாக இஸ்தானா நெகாரா பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர்கள் கூறினர்.
கௌதம புத்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பௌத்த சமயத்தினரால் விசாக தினம் இன்றைய நாளில் கொண்டாடப்படுகிறது