ECONOMYSELANGOR

பாங்கி, மகா சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் நிதியுதவி

ஷா ஆலம், மே 16- சமய மற்றும் சமூக நலப் பணிகளை மேற்கொள்வதற்காக பாங்கி, மகா சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் நிதியுதவி வழங்கினார்.

இந்துக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக ஆலயச் செயலாளர் எம். வெள்ளைச்சாமி செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக மஸ்வான் சொன்னார்.

பாங்கி மற்றும் சுங்கை ராமால் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு ஜனவரி முதல் தற்போது வரை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக சுமார் 500 பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்ட பல்வேறு சமூகத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு 2,000 வெள்ளிக்கான காசோலையை சட்டமன்றத் தொகுதி சார்பாக அவர்களுக்கு வழங்கினோம் என்று தனது பேஸ்புக் பதிவில்  அவர் கூறினார்.

இந்த மானியத்தை ஆலய நிர்வாகத்தினர் முறையான வழிகளில் பயன்படுத்துவர் என தாம் நம்புவதோடு வசதி குறைந்தவர்களுக்கு உதவும் திட்டங்களையும் அமல்படுத்துவர் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.


Pengarang :