ஷா ஆலம், மே 21: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான நிலையான ரமலான் பஜார் விருதை மொத்தம் 10 வர்த்தகர்கள் பெற்றுள்ளனர்.
வணிக உரிமத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை ஊராட்சி மன்றம் மதிப்பீடு செய்த பிறகே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக டத்தோ பண்டார் முகமட் அஸான் முகமட் அமீர் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு 20 ரமலான் பஜார் இடங்களில் உள்ள சுமார் 800 வர்த்தகர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மற்ற வர்த்தகர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
“சுத்தம், தரம், பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்நுட்பக் கூறுகளைப் பயிற்சி செய்தல் போன்ற எம்பிபிஜே உரிம நிபந்தனைகளுக்கு இணங்குவதன் அடிப்படையில் இந்த விருது ஐந்தாவது ஆண்டாக நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
நேற்று லாமான் எம்பிபிஜே இல் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்லத்தில், சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
வெற்றியாளர்களுக்கு RM500 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அடுத்த ஆண்டு ரமலான் பஜார் பிளாட்டைத் தேர்ந்தெடுக்கும் சலுகையும் கிடைத்தது.