ECONOMYPENDIDIKANSELANGOR

யு.பி.எம். பல்கலைக்கழக வேந்தராக சிலாங்கூர் சுல்தான் மீண்டும் நியமனம்

ஷா ஆலம், ஜூன் 6- மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (யு.பி.எம்.) துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரோஸ்லான் சுலைமான் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது கடந்த ஏப்ரல் 1 தேதி தொடங்கி வரும் 2029 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான தவணைக்கு யு.பி.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தராக சுல்தான் ஷராபுடின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் மாட்சிமை தங்கிய பேரரசரின் கடிதத்தை டாக்டர் முகமது ரோஸ்லான் அவரிடம் வழங்கினார்.

பல்கலைக்கழகத்தின் ஆகக்கடைசி நிலவரங்கள் மற்றும் அடுத்து நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்து சுல்தானிடம் டாக்டர் முகமது ரோஸ்லான் இச்சந்திப்பின் போது விளக்கமளித்ததாக சிலாங்கூர் அரச அதிகாரப்பூர்வ பேஸ்புக் கூறியது.

ஷா ஆலமில் உள்ள இஸ்தானா புக்கிட் காயாங்கானில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுல்தான் ஷராபுடின் அவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் யு.பி.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.


Pengarang :