கோலாலம்பூர், ஜூன் 9: சிஜில் பெலாஜாரன் மலேசியா (SPM) 2021 தேர்வு மதிப்பீட்டு பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான கொடுப்பனவு இன்று முதல் வழங்க மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களால் பெறப்படவில்லை என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ராட்ஸி கூறினார்.
“இந்த விஷயத்தைப் பரிசீலித்துச் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணம் செலுத்துமாறு தேர்வு வாரியத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
“இன்று முதல் பணம் செலுத்தும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.