ECONOMYSELANGOR

இந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் மேடானில் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம் மீண்டும் நடைபெறுகிறது

ஷா ஆலம், ஜூன் 11: தரமான  சமையல் பொருட்களை மலிவான விலையில் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம்  வழி ஞாயிற்றுக்கிழமை தாமான் மேடான் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் விற்பனை செய்ய உள்ளது.

கடந்த ஞாயிறு தாமான் மேடான் இரவு சந்தையில் லாரிகள் வழி சந்தை விலையை விட கோழி, மீன், மாட்டு இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்க சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடுகளை செய்தது சிறந்த ஆதரவை பெற்றதாக தெரிவித்துள்ளது.

“கடந்த வாரம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், குடியிருப்பாளர்கள் மலிவாக எளிதாகத் தேவை பொருட்களை பெறுவதற்கு நாங்கள் மீண்டும் ஏற்பாடு செய்கிறோம்.

“எனவே, தொகுதி சுற்றியுள்ள மக்களை மீண்டும்  அப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி பயன் பெற அழைக்கிறோம்.  , ஏனெனில் அவர்கள் பணத்தை சிக்கனப்படுத்துவதோடு தரமான புதிய  பொருட்களையும் வாங்க  முடியும்,” என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தரமான கோழி ஒரு கிலோவுக்கு RM10.50, பேக்கேஜ் செய்யப்பட்ட கோழி RM25 (2 kg) மற்றும் எகானமி பேக்கேஜ் செய்யப்பட்ட கோழி RM10 (800 கிராம்) என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாட்டு இறைச்சி மற்றும் எலும்புகள் ஒரு கிலோகிராம் RM32 மற்றும் கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்கள் ஒரு கிலோகிராம் RM8 க்கு விற்கப்படுகிறது. இது தவிர பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.


Pengarang :