MEDIA STATEMENT

டத்தோ கெராமாட் சந்தையில் மீண்டும் தீ

கோலாலம்பூர், ஜூன் 11 – ஜாலான் கெராமாட் டாலாமில் உள்ள டத்தோ கெராமாட் சந்தையில் (பழைய சந்தை) இன்று அதிகாலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புத்துறை தலைமை இயக்க அதிகாரி முகமது ஃபஹ்மி அப்துல் ரஹீம் கூறுகையில், நள்ளிரவு 1.30 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, கெராமாட், ஹாங் துவா, வாங்சா மஜு, ஜாலான் துன் ரசாக் மற்றும் செத்தாபாக் ஆகிய நிலையங்களில் இருந்து 47 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

“நாங்கள் அதிகாலை 1.40 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தோம், ஒரு கடையில் 50 விழுக்காடு சேதமுற்றது.

அந்த தீயில் அருகிலுள்ள சில வீடுகளுக்கும் தீ பரவியது, அவை சுமார் 10 விழுக்காடு சேதமடைந்தன. அதிகாலை 2.11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.


Pengarang :