ECONOMYHEALTHSELANGOR

இந்த வார இறுதியில் ஐந்து மாநிலத் தொகுதிகளில் சிலாங்கூர் சாரிங் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 15: சிலாங்கூர் சாரிங் என்னும் மாநில அரசின் சுகாதார பரிசோதனை திட்டம் இந்த வார இறுதியில் ஐந்து மாநில சட்டமன்றங்களில் நடைபெறும்.

மாநில அரசின் இலவசத் திட்டம், டிங்கில் மக்கள் சமூக கூடம்  (டிங்கில் சட்டமன்றம்) மற்றும் செக்சென் 4 சமூகக் கூடம், பண்டார் பாரு பாங்கி (சுங்கை ரமால் சட்டமன்றம்) ஆகிய இடங்களில் இந்த சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில அரசின் இலவச சுகாதார பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை, பாடாங் தாமான் கோசாஸ் , அம்பாங் (தெராதாய் மற்றும் பண்டான் இண்டா சட்டமன்றம்) மற்றும் (சுங்கை பிலேக் சட்டமன்றம்) ட்சே மின் சீன தேசிய வகை பள்ளிக்கு அடுத்த கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறும்.

http://selangorsaring.selangkah.my என்ற இணைப்பின் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம், Selcare 1-800-22-6600 அல்லது சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களை http://drsitimariah.com/talian-suka/ வழியாக அழைக்கவும்.


Pengarang :