ECONOMYSELANGOR

சட்டவிரோதமாக டீசல் ஏற்றி வந்த படகு பறிமுதல்- ஏ.பி.எம்.எம். நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 17- முறையான அனுமதியின்றி பதினைந்து  பீப்பாய் டீசல், 32 வாளிகள் மற்றும் 30  போத்தல்களில் மசகு எண்ணெய்  ஏற்றிச் சென்ற சரக்குக் படகை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன சிலாங்கூர் பிரிவு (ஏ.பி.எம்.எம்.) சிலாங்கூர் நேற்று கோலக் கிள்ளானிலிருந்து இருந்து தென்மேற்கே 0.1 கடல் மைல் தொலைவில் தடுத்து வைத்தது.

நேற்று காலை 10.30 மணியளவில் சிலாங்கூர் கடற்பகுதியில் வழக்கமான ரோந்து மற்றும் அமலாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த பெர்காசா 35 படகினால் டீசல் ஏற்றியிருந்த அந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக அதன் இயக்குனர் கடல்சார் கேப்டன் வி சிவகுமார் தெரிவித்தார்.

அந்த படகின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 60 மற்றும் 64 வயதுடைய உள்ளூர் கேப்டன் உள்பட இருவர் அந்த படகில் இருந்தது  கண்டறியப்பட்டது என்றார் அவர்.

அவர்கள் கடந்தாண்டு ஜூலை 30 ஆம் தேதியுடன் காலாவதியான பி.டி.ஏ. அனுமதியை வைத்திருந்தனர். மேலும், பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டத்தின் (பி.டி.ஏ.) கீழ் அந்தப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான சரியான அனுமதி ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக அவ்விரு நபர்களும் புலாவ் இண்டா கடல் போலீஸ் படகுத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :