ஷா ஆலம், ஜூன் 19: ஜூலை மாதம் நடைபெறும் ஐடில் அட்ஹா கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இடங்களில் அடிப்படைப் பொருட்களின் மலிவான விற்பனைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (பிகேபிஎஸ்) மூத்த சந்தைப்படுத்தல் மேலாளர் கூறுகையில், குறைந்த வருமானம் பெரும் மக்கள் வாழும் பகுதி மற்றும் இதற்கு முன் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்ற பகுதிகளில் விற்பனை செய்யப்படும்.
“ஐடில் அட்ஹாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே விற்பனை தொடங்கும். இது ஒவ்வொரு நாளும் இரண்டு இடங்களை உள்ளடக்கியது.
“தஞ்சோங் சிப்பாட் மற்றும் பாத்தாங் காலி ஆகிய இடங்களில் நாங்கள் நடத்த உள்ளோம்,” என்று அவர் கூறினார்.