ECONOMYHEALTHNATIONAL

மலேசியாவில் கோவிட்-19 இறப்புகள் பூஜ்ஜியமாக உள்ளது

கோலாலம்பூர், ஜூன் 20 – டிசம்பர் 18, 2020க்குப் பிறகு முதன்முறையாக, மலேசியாவில் கோவிட்-19 காரணமாக பூஜ்ஜிய இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 12 லட்சத்து 94 ஆயிரத்து 225 சிறார்கள் அல்லது 36.5 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் போர்ட்டலின்படி, மொத்தம் 1,737,624 அல்லது 49 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :