ECONOMYSELANGOR

வணிகர்களுக்கு உதவ செக்சன் 27 இல் காலை சந்தை- ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூன் 20– இங்குள்ள செக்சன் 27 பகுதியில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காலை சந்தையை ஷா ஆலம் மாநகர் மன்றம் நடத்துகிறது.

செக்சன் 27, ஜாலான் புக்கிட் ராயா, 27/8 பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்தையின் மூலம் வணிகர்கள் தங்கள் வருமானத் பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இங்கு வணிகம் செய்வதற்கு 80 லாட்கள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. உணவு, பானங்கள், அத்தியாவசிய சமையல் பொருள்கள், கோழி, மீன் போன்ற சமையல் மூலப்பொருள்கள் இங்கு விற்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

செக்சன் 27 சுற்றுவட்டாரம் மற்றும் மாநிலத்தின் இதரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தொடக்கி வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்தையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதோடு வணிகர்களும் தங்களின் அன்றாட வருமானம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.


Pengarang :