ECONOMYPENDIDIKAN

கைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதால், நான்கு ஆதரவற்ற பிள்ளைகள் விடுதியை விட்டு ஓட்டம்.

குவாந்தான், ஜூன் 21: இங்குள்ள கேம்பாடாங்கில் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கான விடுதியில் இருந்து நேற்று நள்ளிரவு மூன்று உடன்பிறப்புகள் உட்பட நான்கு வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

குவாந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு கூறுகையில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அனைவரும் பெக்கானில் உள்ள கம்போங் செண்டரவாசி பகுதியைச் சேர்ந்தவர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் விடுதியின் பின் கதவு வழியாக தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

விடுதியை விட்டு தப்பிச் செல்ல சில விடுதி கட்டுப்பாடுகளில் அவர்களுக்கு உடந்தை இல்லாமலிருக்கலாம் எடுத்துக்காட்டாக விடுதியில் கைப்பேசிகள் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவில் அவர்களுக்குத் திருப்தியின்றி இருக்கும்  என்றார் அவர்.

“அவர்கள் காணாமல் போனதை 35 வயதான விடுதி வார்டன் கவனித்தார், அவர் விடுதியின் தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இன்று மதியம் 5.05 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தார்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வான் முகமது ஜஹாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட அனைத்து வாலிபர்கள் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளாக விடுதியில் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

காணாமல் போனவர்கள் என வழக்குகள் வகைப்படுத்தப்பட்டு, அவர்களைக் கண்டறியும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.


Pengarang :