ECONOMYSELANGOR

விளக்குகளை தரம் உயர்த்தும் பணிக்காக எம்.பி.எஸ். அரங்கம் டிசம்பர் 7 வரை மூடப்படும்

ஷா ஆலம், ஜூன் 30- பண்டார் பாரு செலாயாங்கில் அமைந்துள்ள எம்.பி.எஸ். அரங்கம் நாளை தொடங்கி வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை மூடப்படும் என்று செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.

அந்த அரங்கில் உள்ள ராட்ஸத விளக்குகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு வழி விடும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் அந்த அரங்கம் மூடப்படுகிறது என்று நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஸிட் சைரி கூறினார்.

அரங்கிலுள்ள ராட்ஸத விளக்குகளை தரம் உயர்த்தும் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த அரங்கம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-61201153 என்ற எண்களில் நகராண்மைக் கழகத்தின் பொது வசதிகள் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :