ECONOMYSELANGOR

கம்போங் துங்கு தொகுதியில் கண் பரிசோதனை இயக்கம்- 100 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 5– கம்போங் துங்கு தொகுதி ஏற்பாட்டில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற இலவச கண் பரிசோதனை இயக்கத்தில் 100 பேர் பங்கு கொண்டனர்.

பெட்டாலிங் ஜெயா, எஸ்.எஸ்.2 இல் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்த இயக்கத்தில் மூன்று விதமான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

பார்வை குறைபாடு, கண் வறட்சி மதிப்பீடு மற்றும் விழிப்படல சோதனை ஆகியவையே அந்த மூன்று வித பரிசோதனைகளாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வோர் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கில் அவர்களுக்கு சோதனைக்கான நேரம் முன்கூட்டியே ஒதுக்கித் தரப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் வந்தால் போதுமானது என அவர் தெரிவித்தார்.

இந்த அணுகுமுறை கூட்ட நெரிசலையும்  காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கும் பெரிதும் துணை புரிந்ததோடு வருகையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனை இயக்கத்தின் போது மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) பெடுலி ராக்யாட் திட்டங்களுக்கு பதிவு செய்வதற்கான முகப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது என அவர் கூறினார்.


Pengarang :