ECONOMYSELANGOR

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 70 ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது

கோலாலம்பூர், ஜூலை 6– அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 70 பணியாளர்கள் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஊழியருக்கான விருதினைப் பெற்றனர். அவர்களில் மூவர் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நகராண்மைக் கழகத்தின்  நற்பெயரை தேசிய மற்றும் அனைத்துலக நிலையில் நிலைநாட்டிய ஐந்து புத்தாக்க ஆக்கத்திறன் குழுக்களுக்கும் இந்நிகழ்வில் விருது வழங்கப்பட்டதாக நகராண்மை கழகத்தின் தலைவர் ஜூலைஹா ஜமாலுடின் கூறினார்.

சிறப்பான சேவையை வழங்கியவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விருது ஊழியர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு மேலும் சிறப்பான முறையில் சேவையாற்றுவதற்கான உந்து சக்தியை அவர்களுக்கு வழங்கும் என்று அவர் சொன்னார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்நிகழ்வில் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதை வழங்கினார். மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற 12 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு பணியின் போது உயிரிழந்த பணியாளர் ஒருவரின் குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :