ECONOMYSELANGOR

மலிவு விலை சந்தையில் 300 பயனிட்டாளர்களுக்கு RM5 தள்ளுபடி கூப்பன்கள் அரை மணி நேரத்தில் விநியோகிக்கப்பட்டன

உலு சிலாங்கூர், ஜூலை 6: இன்று காலை புக்கிட் பெருந்துங்கில் உள்ள ஜாலான் காந்தன் 2 இல் ஐடில் அட்ஹா  கொண்டாடத்திற்கு  அடிப்படைப் பொருட்களின் விற்பனையில் 300க்கும் மேற்பட்ட பயனிட்டாளர்கள்  கலந்து கொண்டனர்.

பத்தாங் காலி சட்டப் பேரவை ஒருங்கிணைப்பு அதிகாரி சைபுடின் ஷாபி முகமது நிதியுதவி செய்த RM5 தள்ளுபடி கூப்பனின் அடிப்படையில் இந்த தொகை பதிவு செய்யப்பட்டது, இது பொதுமக்களுக்கு அரை மணி நேரத்தில் அதாவது, காலை 9.30 மணியளவில் விநியோகிக்கப்பட்டு தீர்ந்தது.

15 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் ஒரு கோழி மற்றும் சமையல் எண்ணெய் பாக்கெட் ஆகியவை மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்த விற்பனையாகும்.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) ஐடில் அட்ஹாவை முன்னிட்டு நேற்று தொடங்கி ஐந்து இடங்களில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு அடிப்படை பொருட்களை மலிவான விற்பனையில் விற்கிறது


Pengarang :