ECONOMYHEALTHSELANGOR

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடைவீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 19– மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த மருத்துவப் பரிசோதனையின் வழி நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த சோதனைகளில் கண் குறைபாடு தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். குறிப்பாக பார்வை மங்கலாகத் தெரிவது, க்ளெவ்கோமா மற்றும் விழிப்படல பிரச்னை ஆகியவை மீதான சோதனையும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

நமக்கு ஏற்பட்டுள்ள நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு உள்ள ஒரு வழி இதுவாகும்.

மேலும், நோய்கள் கண்டறியப்படும் பட்சத்தில் முன்கூட்டியே சிகிச்சை பெறுவதன் மூலம் அதனை குணப்படுத்தவும் முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயல் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் சாரிங் திட்டம் இம்மாதம் 24 ஆம தேதி பெட்டாலிங்கில் நடைபெறுகிறது.


Pengarang :