ECONOMYHEALTHNATIONAL

புதிதாக 3,080 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று – ஏழு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 19- நாட்டில் நேற்று புதிதாக 3,080 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. அதில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது.

முந்தைய தினம் பதிவான தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது 856 குறைவாகும். நேற்று முன்தினம் 3,936 பேர் இந்நோய்க்கு இலக்காயினர்.

இதனிடையே, கோவிட்-19 தொடர்புடைய ஏழு மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. அவற்றில் மூன்று மருத்துவமனைக்கு வெளியே நேர்ந்த மரணங்களாகும்.

நேற்று வரை நாட்டில் 42,185 தீவிர கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் 40,622 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 34 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களிலும் 1,472 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து  நேற்று 3,399 பேர் குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 48 ஆயிரத்து 014 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :