ECONOMYSELANGOR

கெஅடிலான் உதவித் தலைவராக சரஸ்வதி கந்தசாமி நியமனம்- எம்.பி.பி. பதவிக்கு மணிவண்ணன், யுனேஸ்வரன் தேர்வு

ஷா ஆலம், ஜூலை 21– கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு சரஸ்வதி கந்தசாமி உள்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதல்வியும்  பெர்மாத்தாங் பாவ் நாடாளுன்ற உறுப்பினருமான நுருள் இஸா அன்வார் மற்றும்  அவாங் ஹூசைனி சஹாரி ஆகியோர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட மற்ற இரு தலைவர்களார்.

நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் இந்த நியனம் குறித்த தகவலை கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டார்.

கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் (எம்.பி.பி.) நியமனப் பதவிகளுக்கு ஐவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன், ஆர். யுவனேஸ்வரன், கிறிஸ்டினா லியு, அபுன் சுய் அன்யிட் ஆகியோரை அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அந்த ஐவராவர்.

கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியை டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தக்க வைத்துக் கொள்வார் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சைபுடின், ரபிஸி ரம்லியிடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :