ECONOMYSELANGOR

ரவாங் புறவழிச் சாலை ஜூலை 31ஆம் தேதி தற்காலிகமாக மூடப்படும்

ஷா ஆலம், ஜூலை 26– ரவாங் புறவழிச் சாலை வரும் ஜூலை 31 ஆம் தேதி அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிகமாக மூடப்படும்.

அந்த சாலை நள்ளிரவு 12.00 மணி தொடங்கி  நண்பகல் 12.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று செலாயாங் நகராண்மைக் கழகம் கூறியது.

‘சிலாங்கூர் பைபாஸ் ஹால்ப் மரத்தோன் 2022‘ எனும் ஓட்டப்பந்தய  நிகழ்வுக்காக அந்த சாலை மூடப்படுகிறது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் அதேவேளையில் மாற்றுத் தடங்களையும் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொள்கிறோம். என நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த மராத்தோன் போட்டி நடைபெறுகிறது. 21 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டி அதிகாலை 3.00 மணிக்கு தொடங்கும்.


Pengarang :