ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19: 4,503 புதிய சம்பவங்கள், 10 இறப்புகள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 28: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகள் முந்தைய நாளில் பதிவு செய்யப்பட்ட 4,759 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது நேற்று 4,503 சம்பவங்களாகக் குறைந்துள்ளன.

கோவிட்நவ் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, புதிய சம்பவங்களின் அதிகரிப்பு மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 4,664,213 ஆக மாற்றுகிறது, அவற்றில் 46,906 செயலில் உள்ள சம்பவங்கள் ஆகும்.

நேற்றைய நிலவரப்படி, 45,318 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர், தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 24 சம்பவங்கள், மருத்துவமனைகளில் 1,505 சம்பவங்கள் மற்றும் 59 சம்பவங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சிகிச்சை பெற்றன.

நாடு முழுவதும் உள்ள ஐசியூ வசதிகளின் பயன்பாட்டு விகிதம் இப்போது 62 விழுக்காடாக உள்ளது, கோவிட்-19 சம்பவங்கள் 15.8 விழுக்காடாக உள்ளது என்று கோவிட்நவ் தரவு காட்டுகிறது.

மருத்துவமனைக்கு வெளியே நான்கு இறப்புகள் உட்பட மொத்தம் 10 இறப்புகள் பதிவாகியுள்ளன, தொற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,942 ஆக உள்ளது.

நேற்று புதிய கிளஸ்டர்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மொத்தம் 7,036 கிளஸ்டர்கள், அவற்றில் 19 இன்னும் செயலில் உள்ளன.


Pengarang :