ECONOMYSELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் இரண்டாம் கட்டப் பயணத் தொடர் ஆகஸ்டு மத்தியில் தொடங்கும்

கோம்பாக், ஆக 1- ஜெலாஜா சிலாங்கூர்  இரண்டாம் கட்டம் பயணத் தொடர் நான்கு மாவட்டங்களை இலக்காக கொண்டு வரும் ஆகஸ்டு மாத மத்தியில் தொடங்கப்படும்.

கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் உள்ளடக்கங்களை மையமாகக் கொண்ட இந்த பயணத் தொடர் கிள்ளான், சபாக் பெர்ணம், சிப்பாங், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்நிகழ்வுகளில்  இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பொருளாதாரம், சமூகவியல், நிலைத்தன்மை, நிர்வாகம் ஆகிய நான்கு அம்சங்கள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கப்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான மாநிலத்தின் செயல் திட்டங்களை உள்ளடக்கிய முதலாவது சிலாங்கூர் திட்டத்தை அமிருடின் கடந்த புதன் கிழமை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


Pengarang :