ECONOMYSELANGOR

எம்.பி.பி.ஜே. ஏற்பாட்டில் இம்மாதம் ஐந்து இடங்களில் நடமாடும் முகப்பிடச் சேவை

ஷா ஆலம், ஆக 8– பிரதான முகப்பிடங்களில் பரபரப்பான நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இம்மாதம் முழுவதும் ஐந்து இடங்களில் நடமாடும் முகப்பிடச் சேவையை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் நடத்தவுள்ளது.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த நடமாடும் முகப்பிடங்களில் சேவை வழங்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த முகப்பிடச் சேவையை ஏற்பாடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிரதான முகப்பிடங்களுக்கு வருவதை தவிர்க்க இயலும். எனினும், இணையம் வாயிலாக தங்கள் பணிகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என அது தெரிவித்தது.

அலுவலக நேரத்திற்கு பிறகும் பொதுமக்கள் தங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும் என்பதால் இந்த இணைய சேவையை மாநகர் மன்றம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

மேல் விபரங்களுக்கு mbpj.gov.my  என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது  @petalingjayacitycouncil என்ற பேஸ்புக் பக்கம்  மற்றும் @pjcitycouncil எனும் டிவிட்டர், இண்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :