ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 2,793 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி- 7 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஆக 21- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 2,793 ஆக பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,490 ஆக இருந்தது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 17 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய நிலவரப்படி 40,417 பேர் கோவிட்-19 நோயின் கடும் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 39,379 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் 1,379 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 29 பேர் தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று கோவிட்-19 தொடர்புடைய 7 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36,136 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :