ஷா ஆலம், ஆகஸ்ட் 24: கிட்டத்தட்ட 7 கோடி ரிங்கிட் நிதியுதவி மூலம் 4,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் ஹிஜ்ரா சிலாங்கூர் நன்மைகளைப் பெற்றுள்ளனர்.
மாநில அரசு 2022 பட்ஜெட்டில் RM100,000 வரையிலான கடன்களுடன் புதிய திட்டங்களை உருவாக்குவதுடன் தொழில்முனைவோருக்கு நிதி அளிப்பதற்காக RM12 கோடி ஒதுக்கியது டத்தோ மந்திரி புசார் கூறினார்.
“சிலாங்கூர் தொழில்முனைவோருக்கான உதவி எப்போதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை நகர்த்துவதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக்கில் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டுவது கண்டு மாநில அரசு மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்கான ஆதரவுத் திட்டங்கள் எப்போதும் வகுக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
அமிருடின் கூற்றுப்படி, தற்போதுள்ள திட்டங்களை மேம்படுத்த மாநில அரசு தொடர்ந்து உதவி மற்றும் கருத்துகளை மதிப்பீடு செய்யும்.
“எவ்வளவு வெற்றிகரமான தொழில் முனைவோர் பிறக்கிறார்களோ, அந்த அளவுக்கு இந்த மாநிலம் வளமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று, அமிருடின் சிலாங்கூர் பட்ஜெட் 2022 ஐ சமர்ப்பித்து, ஹிஜ்ரா நிதி திட்டத்தில் பல மேம்பாடுகளை அறிவித்தார், இதில் 12 கோடி ரிங்கிட் மதிப்பிலான நிதி அடங்கும்.